இந்து மதத்தை பின்பற்றுபவர்கள், அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள்.

ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்:-



நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

பெரும்பாலானவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறு கட்டுவார்கள். நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக இது செயல்படும். பட்டுநூலினால் ஆன, காப்புக் கயிறுகளை அணிவது அதிக பலன் தரும்.

மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுக்கொள்வார்கள். இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.

குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவரும் இவற்றை அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்களைச் சொல்வது அதிக பலன்களைத் தரும்.

இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலைச் சேமித்து நம்மைக் காக்கும்.



மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதேவி செங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள்.

காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களைக் கோர்த்து கழுத்தில் மாலையாக அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீறு அணியத் தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்புக் கயிறுகளை அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக்கொள்ளுங்கள். அது நமது சமய நம்பிக்கையை வளர்ப்பதாகவும் இருக்கும்.